லேப்டாப் வெடித்து வீட்டில் தீ விபத்து

தாம்பரம் : குரோம்பேட்டை, ராதா நகர், நாயுடு ஷாப் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிராகரன்ஸ் (29), தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் தனது லேப்டாப்பிற்கு சார்ஜ் போட்டுவிட்டு வெளியே சென்றார். நீண்ட நேரம் சார்ஜ் ஏறியதால் சூடாகி, லேப்டாப் வெடித்து சிதறியது. இதனால், வீட்டின் படுக்கையறையில் தீப்பிடித்து, ஏசி, மின்விசிறி மற்றும் படுக்கை ஆகியவை எரிந்து நாசமாகின. தகவலறிந்து வந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்கநாதன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

Related Stories: