மேலூர்/ திருமங்கலம், நவ.1: மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று கனமழையால் 22 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் பொருட்கள் நாசமாயின.
மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ததால் கொட்டாம்பட்டி அருகில் உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த பஞ்சவர்ணம் என்ற மூதாட்டியின் அடுக்கு மாடி வீடு உட்பட 7 பேரின் வீடுகள் இடிந்து விழுந்தன. இந்நிலையில் நேற்று மழையால் ஊறி போயிருந்த 11 வீடுகள் இடிந்து விழுந்தன.