திருப்பூர், நவ.1: திருப்பூர் ஆத்துப்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியை சார்ந்த லோகேஸ்வரன்(25) தனது புதிய தனது பைக்கில் அனுப்பர்பாளையம் தண்ணீர் பந்தல் சாலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த நான்கு பேர் லோகேஸ்வரன் கழுத்தில் வைத்து மிரட்டி மொபைல், ரூ.ஆயிரம் பணம் மற்றும் பைக்கை பறித்துக்கொண்டு தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். லோகேஸ்வரன் கூச்சலிட்டதை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து நான்கு பேரையும் பிடித்து 15 வேலம்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவில் எல்.எம்.எஸ். வீதியைச்சார்ந்த வசந்தகுமார்(30), புதுகோட்டை மாவட்டம் கோவிலூர் ஆலன்குடியைச்சார்ந்த கண்ணதாசன்(36), திருப்பூர் 15 வேலம்பாளையம் நேரு நகர் கண்ணன்(27), 15 வேலம்பாளையம் மாரப்ப கவுண்டர் வீதி சபாபதி(34) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.