அவிநாசி வட்டாரத்தில் நாளை மின்தடை

அவிநாசி,நவ.1:  அவிநாசி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நாளை (2ம் தேதி) நடைபெறுகிறது. எனவே, அவினாசி, வேலாயுதம்பாளையம், ராக்கியாபாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சக்திநகர்,எஸ்.பி.அப்பேரல்ஸ், குமரன்காலனி, அவினாசிலிங்கம்பாளையம் சாலை,   ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது என அவினாசி மின்கோட்ட செயற்பொறியாளர் விஜய ஈசுவரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: