க.பரமத்தி, நவ. 1: க.பரமத்தி ஒன்றியம் மொஞ்சனூர் ஊராட்சி தொட்டியப்பட்டியில் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கோவை தொழிலதிபர் ஒருவரால் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டி தரப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன், முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா, மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி வைத்து பேசினர்.