செய்யாறு, நவ.1: செய்யாறு அருகே தென் எலப்பாக்கம் ஏரி மதகில் திடீரென விரிசல் ஏற்பட்டதால், வருவாய் மற்றும் பொதுப்பணித்தறை அதிகாரிகள் 250 மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து நீர் கசிவை தடுத்து நிறுத்தினர்.செய்யாறு தாலுகா அனக்காவூர் ஒன்றியம் தென்எலப்பாக்கம் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியானது 250 ஏக்கர் பரப்பளவை கொண்டது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் 19 அடி ஆழம் கொண்ட இந்த ஏரியில் 10 அடிக்கு நீர்வரத்து உள்ளது. இந்நிலையில், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மதகு பகுதியில் நேற்று மதியம் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.