திருச்சி, அக்.31: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (112வது பிறந்தநாள்) ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் மாவட்ட செயலாளர் எம்எல்ஏ., கே.என்.நேரு தலைமையில், நகர செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, மாவட்ட நிர்வாகிகள் குடமுருட்டி சேகர், ஆனந்த், பகுதி செயலாளர்கள் மதிவாணன், கண்ணன், மண்டி சேகர், பாலமுருகன், ராம்குமார் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் குமார், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அமைப்பு செயலாளர் பரஞ்ஜோதி, துணை செயலாளர் அருள்ஜோதி, வக்கீல் ராஜ்குமார், சகாதேவபாண்டியன், கண்ணதாசன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.