தொற்றுநோய் பரவும் அபாயம் குடமுருட்டி ஆற்றில் மூதாட்டி சடலம்

திருவையாறு, அக். 31: திருவையாறில் உள்ள குடமுருட்டி ஆற்றில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் கிடந்தது.திருவையாறு அடுத்த நடுக்காவேரி செல்லியம்மன் கோவில் எதிரே உள்ள குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் தண்ணீரில் இறந்த நிலையில் 70 வயது மூதாட்டி சடலம் கிடந்தது. இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபாரதி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.பின்னர் மூதாட்டி உடலை கைப்பறறி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: