கரூர், அக். 31: கரூர் மாவட்டம் ஏமூரில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாவட்டம் ஏமூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின்கீழ் ரூ. 13லட்சம் மதிப்பில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.இந்த கட்டிடம் கடந்த சில மாதங்களாக எப்போதும் பூட்டியே நிலையில் உள்ளதாக இந்த பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், கட்டிடத்தை சுற்றிலும் அதிகளவு முட்புதர்கள் வளர்ந்து மிகவும் மோசமான நிலையில், கொசுக்கள் உற்பத்தி மையமாகவும் மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.