கரூர், அக். 31: தொடர்ந்து மழைபெய்துவருவதால் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை சீர்செய்யவேண்டும் எனபொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்டத்தின் சராசரி மழை அளவு 652மிமீ. அக்டோபர் மாதம்வரை பெய்யவேண்டிய மழை 493.70மிமீக்கு இதுவரை சுமார் 400மிமீ மழைபெய்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழைபெய்து கொண்டிருக்கிறது.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அவற்றினை புனரமைத்தும் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் இப்பணிகள்இன்னமும் முழுமையபெறவில்லை. பருவமழை காலங்களிலும், வெப்ப சலனங்களினாலும் பெறப்படும் மழை நீரினை வீணடிக்காமல் உரிய முறையில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தி சேமித்திடும் பட்சத்தில், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பற்றாக்குறையினை சரி செய்யலாம்.