அவிநாசி, அக். 31:பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி செயலாளர்களுக்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் நேற்று உத்தரவிட்டனர். திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) கனகராஜ் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்துமதி, நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி பகுதிகள், தனியார் நிலங்களில் பயன்பாடில்லாத நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும். மேலும், ஆழ்துளை கிணறுகளை மூட தனியாருக்கு எச்சரிக்கை கடிதம் உடனடியாக அனுப்ப வேண்டும்.