தரங்கம்பாடி, அக்.31: நாகை மாவட்டம், பொறையார் அருகே உள்ள குருபகவான் கோயிலில் குருபெயர்ச்சியையொட்டி நேற்றும் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். பொறையார் அருகே தேவானூரில் விசாலாட்சி அம்பிகை சமேத விஸ்வநாத சுவாமி கோயில் உள்ளது. அங்கு ஞானகுருபகவான் தனி சன்னதியில் இருந்து அருள்பாலித்து வருகிறார். ஆதிகுரு என்று அழைக்கப்படும் இந்த குரு பகவானை பிரம்மா பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், இந்த குருபகவான் அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்கியதாகவும் தலவரலாறு கூறுகிறது.