கலெக்டர் ஆய்வு பொறையார் அருகே குருபகவான் கோயிலில் 2வது நாளாக பக்தர்கள் தரிசனம்

தரங்கம்பாடி, அக்.31: நாகை மாவட்டம், பொறையார் அருகே உள்ள குருபகவான் கோயிலில் குருபெயர்ச்சியையொட்டி நேற்றும் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். பொறையார் அருகே தேவானூரில் விசாலாட்சி அம்பிகை சமேத விஸ்வநாத சுவாமி கோயில் உள்ளது. அங்கு ஞானகுருபகவான் தனி சன்னதியில் இருந்து அருள்பாலித்து வருகிறார். ஆதிகுரு என்று அழைக்கப்படும் இந்த குரு பகவானை பிரம்மா பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், இந்த குருபகவான் அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்கியதாகவும் தலவரலாறு கூறுகிறது.

குருபெயர்ச்சியையொட்டி நேற்றுமுன்தினம் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்கு பிரவேசித்தார். இதனையொட்டி நேற்றுமுன்தினம் அதிகாலையில் குருபகவானுக்கு பால், சந்தனம் மற்றும் திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடத்தி மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரதாசங்கள் வழங்கப்பட்டன. பரிகாரத்திற்காக பக்தர்கள் நேற்றும் குருபகவான் சன்னதியில் அதிக அளவில் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: