புதுக்கோட்டை, அக்.27: புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விபத்து, மாசு மற்றும் ஒலியில்லா தீபாவளியாக கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் உள்ள புதிய பஸ் நிலையம், அண்ணாசிலை, கீழராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜேந்திரபாபு, உதவி சுற்றுச்சூழல் செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி பொறியாளர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.