திருமயம், அக்.25: அரிமளம் அருகே ரயில்வே கேட் கீப்பர் இல்லாததால் ரயில் இயக்குபவர்களே கேட்டை மூடி திறப்பதால் பயண நேரம் அதிகமாவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை இருந்த மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 7 அண்டுகளுக்கு மேலாக நடைபெற்று, தற்போது முடிவுக்கு வந்து ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கப்படும் ரயில்கள் சீராக இயக்கப்படுவதில்லை என பயணிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காரணம் புதிய ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு ரயில் பாதையை கிராஸ் செய்யும் கிராம சாலை, நெடுஞ்சாலை வரும் வாகனங்களை கட்டுப்படுத்த கட்டப்பட்டுள்ள ரயில்வே கேட்டுகள் கேட் கீப்பர் இல்லாமல் இருப்பதாக பயணிகள், வாகன ஓட்கள்,பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ரயிலை இயக்குபவர்கள் ரயிலை நிறுத்திவிட்டு கேட்டை மூடி, திறந்து விட்டு சாலையில் வரும் வாகனங்களை கையாளுகின்றனர்.