ஆவடி, அக். 25: ஆவடி அருகே, திருநின்றவூர் பகுதி ஆற்றில் மணல் திருடிய லாரி, பொக்லைனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 6 பேர் கும்பலை தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த திருநின்றவூர் ராஜாகுப்பம் பகுதி ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதாக நேற்று முன்தினம் திருநின்றவூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து எஸ்ஐ நாகராஜன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, 3 லாரிகளில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணலை மர்ம கும்பல் திருடி கொண்டிருப்பது தெரிய வந்தது. பின்னர், அவர்கள் போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்து மணலை கொட்டி விட்டு தப்ப முயன்றனர்.