க.பரமத்தி, அக். 25: சத்திரம் நடுநிலைப்பள்ளியில் பயிலும் 25 மாணவிகளுக்கு அரசு சார்பில் தற்காப்பு கலை பயிற்சி தொடங்கியது. க.பரமத்தி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒன்றியத்திற்குட்பட்ட புன்னம் ஊராட்சி சத்திரம் கடைவீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6, 7, 8ம் வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு அரசு சார்பில் 3மாத கால தற்காப்பு கலை பயிற்சி கற்று கொடுக்கப்பட உள்ளது. சத்திரம் நடுநிலைப்பள்ளியில் 25மாணவிகளுக்கு நடந்த பயிற்சி தொடக்க விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை பரமேஸ்வரி வரவேற்றார்.