பேராவூரணி, அக். 24: பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் அரசு மருத்துவமனை சித்தா மருத்துவ பிரிவு சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கஜானா தேவி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜெயந்தி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் பால்பக்கர், கல்வி புரவலர் ரவி முன்னிலை வகித்தனர். சித்த மருத்துவ பிரிவு டாக்டர் செந்தில்குமார் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உரையாற்றினார்.