கரூர், அக். 24: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரைக்கடை வியாபாரிகளுக்காக கடைகள் அமைக்கும் பணி திருவள்ளுவர் மைதானத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு திருவள்ளுவர் மைதானத்தில் தரைக்கடைகள் அமைக்கப்பட்டு, ஒட்டுமொத்த பொதுமக்களும் இங்கு வந்து தேவையான ஜவுளி ரகங்களை வாங்கிச் செல்லும் அளவுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தாண்டு அக்டோபர் 27ம்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளன. இதனை முன்னிட்டு கரூர் நகராட்சிக்கு சொந்தமான திருவள்ளுவர் மைதானத்தில் நேற்று காலை முதல் தரைக்கடைகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மைதான வளாகம் முழுதும் 300க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று இன்று முதல் அனைத்து வியாபாரிகளும் தங்கள் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யத் துவங்குவார்கள்.