புதுக்கோட்டை, அக்.24: சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும்போது பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் வரும் நவ.12ம் தேதி புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான பேரணியும், நவ.26ம் தேதி மாவட்ட அளவிலான சாலை மறியல் போராட்டமும் நடத்த உள்ளனர்.