கடன் தொல்லை: பெல் ஊழியர் மாயம்

திருவெறும்பூர், அக்.23: திருவெறும்பூர் அருகே கடன் தொல்லையால் மாயமான பெல் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.திருவெறும்பூர் அருகே துவாக்குடி வஉசி நகர் 6வது தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகன் சார்லஸ்ராஜ்(31). இவர் பெல் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடன் தொல்லை அதிகமாக அவருக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16ம்தேதி வேலைக்கு போவதாக கூறி சென்ற சார்லஸ்ராஜ் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது தந்தை அந்தோணிசாமி துவாக்குடி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சார்லஸ்ராஜை தேடி வருகின்றனர். மேலும் சார்லஸ்ராஜூக்கு சுகன்யா என்ற மனைவியும், 9 மாத பெண் குழந்தையும் உள்ளது.

Related Stories: