பெரம்பலூர், அக். 23: பெரம்பலூரில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 25ம்தேதி நடக்கிறது என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தனியார்த்துறை நிறுவனங்களும், தனியார்த் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்புத்துறை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இவ்வாரத்திற்கான தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 25ம்தேதியன்று நடைபெறவுள்ளது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். இதன் மூலம் தனியார்த்துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.