கரூர், அக். 23: பசுந்தீவன உற்பத்தி பற்றிய இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பால் உற்பத்தியில் உலக அளவில இந்தியா முதலிடம் வகிக்கிறது. எனினும் நமது கால்நடைகளின் பால்உற்பத்தித் திறன் குறைவாக ள்ளது. இதற்கு முக்கிய காரணம் கறவை மாடுகளுக்கு போதிய அளவு சரிவிகித சமச்சீர் தீவனம் கிடைப்பதில்லை. குறிப்பாக வறட்சி மற்றும் கோடைக்காலங்களில் பசுந் தீவன பற்றாக்குறை பெரும்பாலான இடங்களில் நிலவுகிறது.எனவே மழைக்காலத்தில போதிய அளவு பசுந்தீவனங்களை உற்பத்தி செய்து எதிர்கால தேவைகளுக்கு சேமித்து வைப்பது முக்கியம்.இதனை கருத்தில் கொண்டு கரூர் மாவட்டம் பண்டுதக்காரன்புதூரில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், பசுந்தீவனங்கள் உற்பத்தி என்ற தலைப்பில் வரும் 30ம்தேதி (புதன்கிழமை) அன்று ஒருநாள் இலவச பயிற்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.