திருவள்ளூர், அக். 23: திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்பேரில் பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர் கனகராஜ் மேற்பார்வையில், செயல் அலுவலர் பிரேமா தலைமையில் டெங்கு ஒழிப்பு கண்காணிப்பு அலுவலர்கள் பாலாஜி, செந்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் செந்தூர்பாண்டி, உதவி செயற்பொறியாளர் சம்பத்குமார், சிட்கோ மேலாளர் பாரதி, தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் சங்க செயலாளர் சக்கரபாணி, பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பாண்டியன் ஆகியோர்களுடன் திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் தொழில் நிறுவன மேலாளர்களுக்கு டெங்கு நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.