காரைக்குடி, அக்.18: டெங்கு கொசு உற்பத்தியாகாமல் தடுக்க குடியிருக்கும் பகுதிகளில் மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார். காரைக்குடி அருகே கல்லலில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு, அங்கன்வாடி பணியாளர்கள் ஊராட்சி செயலாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பாளர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு குறித்த கூட்டம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ஆல்வின் ஜோம்ஸ் வரவேற்றார். கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்து பேசுகையில், ‘‘மாணவர்கள் டெங்கு கொசு எவ்வாறு வளர்ந்து கொசு உற்பத்தியாகி காய்ச்சல் பரவுகிறது என தெரிந்து கொள்ள வேண்டும். சாதாரண கொசுக்கள் கழிவுநீரில் வளரும். ஆனால் டெங்கு கொசு நல்லநீரில் வளரும். எனவே வீடுகளில் தேங்காய் சிரட்டை, பாத்திரத்தில் கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு டெங்கு கொசு இருந்தால் போதும் அந்த பகுதிக்கே காய்ச்சலை பரப்பிவிடும்.