சென்னை, அக். 18: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவலர் பாலாஜி, செய்யூர் எஸ்ஐ ரமேஷ்பாபு ஆகியோர் பணியின்போது, உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், காஞ்சிபுரம் அடுத்த களியனூரை சேர்ந்தவர் கோபி (36). இருளர் குடியிருப்பில் வசிக்கும் இவர் கடந்த 15ம் தேதி, நசரத்பேட்டையில் மரம் வெட்டச் சென்றுள்ளார்.