திருப்பூர், அக். 16: திருப்பூரில் பிரேத பரிசோதனையை விரைந்து முடிக்க பணம் வாங்கிய போலீஸ் ஏட்டை ஆயுதப்படைக்கு மாற்றி நேற்று போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் சுரேஷ் என்பவர் தலைமை போலீசாக பணியாற்றி வந்தார். இவர் பொதுமக்கள் ஒருவரிடம் பிரேத பரிசோதனையை விரைந்து முடிக்க போலீசார் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை விரைந்து முடிக்க பணம் வாங்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. இது குறித்து மாநகர போலீஸ் அதிகாரிகள் வடக்கு உதவி கமிஷனர் வெற்றிவேந்தனை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.