ஊத்துக்குளி அருகே டிப்பர் லாரியை திருடியவர் கைது

திருப்பூர், அக். 16:   ஊத்துக்குளி அருகே உள்ள பெரியபாளையம் பகுதியை சேர்ந்த ராசப்பக்கவுண்டர் மகன் பழனிச்சாமி. இவர் கடந்த மே மாதம் தனக்கு சொந்தமான டிப்பர் லாரியை பழுது பார்ப்பதற்காக கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் உள்ள பனிமனையில் நிறுத்தி விட்டு சென்றார். மறுநாள் பனிமனை சென்று பார்்த்தபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் லாரியை காணவில்லை. மர்ம நபர்கள் இரவில் டிப்பர் லாரியை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பழனிசாமி ஊத்துக்குளி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில், நேற்று போலீசார் ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படியாக ஒருவர் லாரியை ஓட்டி வந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நம்பி வயல் பகுதியை சேர்ந்த உதயநிதி (29) என்பதும், பழனிசாமிக்கு சொந்தமான டிப்பர் லாரியை திருடிச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: