உடுமலை, அக். 16: உடுமலையில் கலப்பட டீத்தூள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உடுமலை பகுதியில் கலப்பட தேயிலை தூள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, உடுமலை நகர உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார், பல்லடம் நகர உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவன்ராஜ் உடுமலையில் தாராபுரம் சாலையில் உள்ள ஒரு குடோனில் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு 270 கிலோ கலப்பட டீத்தூள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.