ஊட்டி, அக்.16: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1899ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி முதல் மேட்டுபாளையம் - குன்னூர் இடைேய மலை ரயில் இயக்கப்பட்டது. அதன் பின் 9 ஆண்டுகள் கழித்து குன்னூரில் இருந்து ஊட்டி அருகேயுள்ள பெர்ன்ஹில் வரை இயக்கப்பட்டது. ஊட்டியில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு 1909ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி ஊட்டி நகரம் வரை மலை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி என்.எம்.ஆர்., என அழைக்கப்படும் நீலகிரி மலை ரயில் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. மலைரயில் ரத அறக்கட்டளை சார்பில் 111வது நீலகிரி மலை ரயில் தின விழா நேற்று ஊட்டி ரயில் நிலையத்தில் நடந்தது.