மதுரை, அக். 16: ஒப்பந்தப்படி ஊதியத்தை தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு எந்தவித ஊதிய பலன்களும் வழங்கப்படவில்லை. மேலும் 12 மணி நேரம் வேலை வழங்கப்படுகிறது. இதனை கண்டித்தும், ஒப்பந்த ஊதியம் ரூ.13 ஆயிரத்து 300ஐ தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.