மாவட்டம் வாகன ஓட்டிகள் அவதி ஐகோர்ட் கிளை உத்தரவு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, அக். 16: ஒப்பந்தப்படி ஊதியத்தை தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு எந்தவித ஊதிய பலன்களும் வழங்கப்படவில்லை. மேலும் 12 மணி நேரம் வேலை வழங்கப்படுகிறது. இதனை கண்டித்தும், ஒப்பந்த ஊதியம் ரூ.13 ஆயிரத்து 300ஐ தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச்செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் தெய்வராஜ், உதவித்தலைவர் ஆஞ்சி, மாநில பொருளாளர் அழகுமலை, முத்துப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் ஒப்பந்த ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இன்றைய நிகழ்ச்சிகள்(இனிய வாசகர்களே... இப்பகுதிக்கு அமைப்புகள், சங்கங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிக்கான செய்திகளை,’  இன்றைய நிகழ்ச்சிகள்’ , தினகரன் நாளிதழ், 2/2, மேலூர் மெயின்ரோடு, உத்தங்குடி, மதுரை- 625 107 முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்)

Related Stories: