பாப்பாக்குடி, அக்.16: முக்கூடல் அருகே தாளார்குளத்தில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி பனை விதை நடும் விழா நடைபெற்றது. முக்கூடல் பயிற்சி டிஎஸ்பி கணேஷ் தலைமை வகித்து பனை விதை விதைக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தாமிரவருணி பாதுகாப்பு இயக்க கவுரவ தலைவர் பங்குதந்தை ஜோசப்ராஜன் வரவேற்றார். நெல்லை ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார், பரமசிவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதயநிறைவு தியான பயிற்சியாளர் கணேசன், திரிபுரசுந்தரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.