பெரம்பலூர், அக். 15: பெரம்பலூரில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் காப்பர் வயர்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடை உள்ளது. அந்த கடையின் எதிர்புறம் குடோன் உள்ளது. அங்கு பேன், மிக்சி, யூபிஎஸ், ஸ்டெப்லைசர் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் யாரும் எதிர்பாராத வகையில் எலக்ட்ரானிக்ஸ் கடை ஊழியர்கள் குடோனுக்கு சென்றபோது, அங்கு மர்மநபர் ஒருவர், குடோனில் இருந்த பொருட்களில் உள்ள காப்பர் வயர்களை திருடி கொண்டிருந்தார்.