திருப்பூர்,அக்.10: திருப்பூரில் தங்கி பணியாற்றும் வெளி மாநிலத்தவர்களின் விபரங்களைசேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.திருப்பூரில் பின்னலாடை சார்ந்த தொழில் நிறுவனங்களில் அதிகப்படியான வெளி மாநில தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்களால் சமீப காலத்தில் தொழிலில் சிறிதளவு வளர்ச்சி இருந்தாலும், அதிகப்படியான சமூக விரோத செயல்களும், குற்றச் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இதனால் குற்றச்செயல்களில் ஈடுபடும் வடமாநிலத்தவர்கள் குறித்து அடையாளம் காண போலீசார் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் உள்ள வடமாநிலத்தவர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் உளவுப்பிரிவு போலீசார் சென்று அவர்களின் பெயர் மற்றும் சொந்த ஊரில் வழங்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களை சேகரித்து வருகின்றனர்.