பெரம்பலூர், அக்.10: பெரம்பலூரில் மாவட்ட சமூக நலத் துறை சார்பில் நடந்த ராமா மிர்தம் அம்மையார் திரு மண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 218 பேர்க ளுக்கு ரூ1.30 கோடி மதிப் பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது. பெரம்பலூரில் வடக்குமாதேவி சாலையிலுள்ள மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நடந்த மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 218 பயனாளிகளுக்கு ரூ1.30கோடி மதிப்பில் திருமண நிதியு தவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தா தலைமை வகித்தார். பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் சாந்தா பேசுகையில், சமூகத்தில் வாழும் ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்தவர்களும் பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்ற அடிப்படையில் பெண் கல்விக்கு அதிக முக்கிய த்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.