ேகாவை, அக். 10: மலேசியாவில் நடந்த உலக அளவிலான சிலம்பம் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவர்கள் 18 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சமீபத்தில் மலேசியாவில் நடந்த உலக அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்றனர். இதில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில், கோவை ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவன் பிரகதி உதயேந்திரன் இரட்டை சுருள் மற்றும் கம்பு ஜோடி சண்டையில் இரண்டு தங்கம் மற்றும் கம்பு சண்டையில் ஒரு வெள்ளி வென்றார். 6ம் வகுப்பு மாணவி விஸ்மயா இரண்டை சுருள் மற்றும் கம்பு சண்டையில் 2 தங்கமும், ஒன்பதாம் வகுப்பு மாணவன் சவுந்தரராஜ் நெடுங்கம்பு வீச்சு போட்டியில் 2 தங்கமும், 7ம் வகுப்பு மாணவி கரிஷ்மா கம்பு சண்டையில் ஒரு தங்கம்