திருவள்ளூர், அக். 10: திருவள்ளூர் மேற்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வக்கீல் எஸ்.சந்திரசேகர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆர்.ரஜினி, பகுஜன் எம்.பிரேம், ஜெய்பீம் செல்வம், வீராவிஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் அம்பேத் ஆனந்தன் அனைவரையும் வரவேற்றார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், தேசிய பொதுச் செயலாளர் வீர்சிங், தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் கௌரி பிரசாத் உபாசகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.