புதுக்கோட்டை,அக்.10: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மறுநாள் (12ம் தேதி) பொதுவிநியோகத்திட்டம் தொடர்பான நுகர்வோர் பாதுகாப்பு குறை கேட்புக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: பொதுவிநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் 2ம் வாரத்தில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட குறைகேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்துக்கான பொது விநியோகத்திட்ட குறைகேட்புக் கூட்டம் நாளை மறுநாள் (12ம் தேதி) நடைபெற உள்ளது.