மயிலாடுதுறை, அக்.10: மயிலாடுதுறை அருகே மீன்வாடைக்கு மூக்கை பொத்திய பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள காஞ்சிவாய் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி விஜயா(42). இவரது மகள் ரஞ்சனி(19) என்பவர் காஞ்சிவாய் கீழத்தெரு வழியாக நடந்து சென்றுள்ளார். அப்பகுதியில் ராஜாமணி மகன் அய்யப்பன்(36) என்பவர் கடை வைத்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். அப்பகுதி துர்நாற்றம் வீசிவருவது வாடிக்கை. ரஞ்சனி அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்.