கும்மிடிப்பூண்டி, அக். 9: கோயில் திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் மண்டை உடைந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து இரு கோஷ்டிகளை சேர்ந்த 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லாவாடா காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் புரட்டாசி மாதம் திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவெடுத்தனர்.
இதில் முறையாக கணக்கு வழக்கு பிரச்னை காரணமாக அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (35). சேகர் (33) என்பவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டது.