உடுமலை, அக். 9: அமராவதிநகர் முதலை பண்ணையில், உடைந்து விழுந்த இரும்பு தடுப்பு கம்பி முழுமையாக அமைக்கப்படாததால், சுற்றுலா பயணிகள் பீதியுடன் முதலைகளை பார்த்து செல்கின்றனர். உடுமலை அமராவதி அணைக்கு அருகில், முதலை பண்ணை உள்ளது. வனத்துறையின் பராமரிப்பில் இந்த பண்ணை உள்ளது.இங்கு 4 அடி முதல் 16 அடி நீளம் வரை கொண்ட 98 முதலைகள் உள்ளன. ஒன்று முதல் 16 வயது, 16 முதல் 30 வயது, 30 முதல் 45 வயது என மூன்று பிரிவுகளாக முதலைகள் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.பண்ணையில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளிலும், மணல்வெளியிலும் முதலைகள் உலா வருகின்றன. அமராவதி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் முதலை பண்ணைக்கும் தவறாமல் வந்து செல்கின்றனர். இங்கு சிறியவர்களுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.10, கேமராக்களுக்கு ரூ.50 என நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.