துறையூர் அருகே மின் ஊழியர் தற்கொலை

துறையூர், அக்.4: துறையூர் அருகே மின் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். துறையூர் அருகே உப்பிலியபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தராஜ் மகன் பிரகாஷ்(30). திருமணமாகாதவர். கொப்பம்பட்டி மின் பிரிவு அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணியாற்றினார். இவருக்கும் அங்குள்ள அவருடைய மேலதிகாரிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் நேற்று காலை விஷம் குடித்து உயிருக்கு போராடினார். உறவினர்கள் உடனடியாக துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர். அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் பிரகாஷ் உயிரிழந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: