உடுமலை,அக்.4: உடுமலை- பழனி தேசிய நெடுஞ்சாலையில், கொழுமம் பிரிவு முக்கியமான பகுதியாகும். தெற்கு பகுதியில் இருந்து உடுமலை நகருக்கு வரும் நுழைவு வாயிலாக இது உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன.இந்த பகுதியில் போலீஸ் கண்காணிப்பு இல்லாததால் அடிக்கடி விபத்து நடந்து வந்தது. ஒழுங்குமுறையின்றி கொழுமம் பிரிவுக்கு திரும்பும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. இதனால் இங்கு போக்குவரத்து காவலரை நியமித்து கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு இங்கு 3 இடங்களில் கேமரா பொருத்தப்பட்டது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து காவலர்கள் இதை கண்காணித்து வந்தனர். ஆனாலும் போக்குவரத்து குளறுபடியும், விபத்துகளும் குறையவில்லை.