ஜெயங்கொண்டம் அருகே பட்டப்பகலில் வீட்டு பூட்டை உடைத்து 36 பவுன் நகை, பணம் கொள்ளை

ஜெயங்கொண்டம், அக். 4: ஜெயங்கொண்டம் அருகே பட்டப்பகலில் வீட்டு பூட்டை உடைத்து 36 பவுன் நகை மற்றும் 30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் வடவீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (45). இவர் கடலூர் மாவட்டம் முஷ்ணம் டாஸ்மார்க் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று பணிக்கு செல்வதற்காக முஷ்ணத்துக்கு சென்றுவிட்டார்.இவரது மனைவி கீதா (40) மட்டும் வீட்டில் இருப்பது வழக்கம். இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு குணமங்கலம் கிராமம் அருகே உள்ள மதகளிர் மாணிக்கம் என்ற கிராமத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு கீதா சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு கீதா வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவுகள் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தது. மேலும் மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பீரோவையும் உடைத்து அதில் இருந்த 36 பவுன் நகைகள், நடவு செலவுக்காக வைத்திருந்த ரூ30 ஆயிரம், 5 ஜோடி கொலுசுகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: