சென்னை, அக்.2: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா, அரசாணைபாளையம் ஊராட்சி சித்தாலபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி முனியம்மாள்(55). இவர்களது மகன் வெங்கடேசன். கல்குவாரியில் வேலை செய்கிறார். இவரது மனைவி ஜோதி(35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தந்தை இறந்த பிறகு வெங்கடேசன் அதேபகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசிக்கிறார். முனியம்மாள் மட்டும் தனியாக வசித்தார். திருமணம் ஆன சில நாட்களில் மருமகள் ஜோதிக்கும், மாமியார் முனியம்மாளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இதுதொடர்பாக இருவரும் அவ்வப்போது தூசி போலீசில் புகார் செய்துள்ளனர். அவர்களை, போலீசார் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். எனினும் தொடர்ந்து தகராறு நடந்து வந்துள்ளது.கடந்த 29ம் தேதி விவசாய நிலத்தில் மாடு கட்டுவது தொடர்பாக முனியம்மாளுக்கும், ஜோதிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது நேற்று முன்தினமும் நீடித்தது. அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், அவர்களை சமாதானம் செய்தனர். அன்று இரவு வெங்கடேசன், குழந்தைகளுடன் சாப்பிட்டுவிட்டு தூங்கினர். ஆனால், ஜோதி தூங்காமல் மாமியார் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார்.