உடுமலை, அக். 2:உடுமலை கிழக்கு ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி திமுக சார்பில், வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சி பெற்ற வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா கணக்கம்பாளையத்தில் நேற்று முன்தினம் நடந்தது. திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் சாமிநாதன் தலைமை வகித்தார். ஒன்றிய திமுக செயலாளர்கள் செல்வராஜ், புவியரசு, முருகேசன், உடுமலை நகர செயலாளர் மத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணக்கம்பாளையம் ஊராட்சி திமுக செயலாளர் லோகநாதன் வரவேற்றார். வரலாற்று நாயகர்கள் படத்தை முன்னாள் எம்பி., விடுதலை விரும்பி, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் ஆகியோர் திறந்து வைத்தனர்.