பொதுமக்கள் எதிர்பார்ப்பு பாபநாசத்தில் சமுதாய வளைகாப்பு விழா

பாபநாசம், அக். 2: பாபநாசத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்தார். திட்ட அலுவலர் ராஜ்குமார் வரவேற்றார். வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்று கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார். வட்டார மருத்துவ அலுவலர் நவீன்குமார், மருத்துவர் திவ்யஜா, பொதுக்குழு உறுப்பினர் மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: