ஆண்டிபட்டி பிஎன்இசி இன்ஜி.கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

தேனி, அக்.1:  ஆண்டிபட்டியில் உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் போடி தர்மத்துப்பட்டி ஏஎச்எம் டிரஸ்ட் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமை நடத்தின. தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ஜெயராஜ் தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாகத் தலைவர் மோகன், நிர்வாக அறங்காவலர் பிரசன்ன வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பாண்டிகுமார் வரவேற்றார். சார்புநீதிபதி ஜெயராஜ் சிறப்புரையாற்றினார்.தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல்கள் சந்தானகிருஷ்ணன், பாலாஜி, ஏஎச்எம். டிரஸ்ட் இயக்குநர் முகமதுசேக் இப்ராகிம் பேசினர். முடிவில் கல்லூரி பேராசிரியர் பால்பாண்டி நன்றி கூறினார்.

Related Stories: