அக். 2ம் தேதி கிராம சபை கூட்டங்கள்

தேனி, அக்.1:  காந்தி பிறந்த நாளான அக்.2ம் தேதி ஆண்டுதோறும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, 2ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள்  ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்,  கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊரக பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், நிதி செலவின விபரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.

Related Stories: