பரமத்திவேலூர், அக்.1: பொத்தனூரில், சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பூ வைத்து, வளையல் அணிவித்து, சீர்வரிசைகளுடன் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. மேலும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சியாக மாற்றும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த துணிப்பைகள் வழங்கப்பட்டது. ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும், மரக்கன்றுகள் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவருக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.