திருவள்ளூர்: ஆன்லைன் மூலம் பெண்ணின் வங்கி கணக்கில் இருந்த சேமிப்பு ரூ.3.80 லட்சம் பணத்தை, அவருக்கு தெரியாமலேயே எடுத்த பெங்களூருவை சேர்ந்த பெண் உட்பட மூவரை, திருவள்ளூர் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளுர் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(52). இவரது மனைவி லக்ஷ்மி(47). இவர், திருவள்ளூர் நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில், இவரது வங்கி கணக்கில் இருந்து, அவருக்கு தெரியாமலே ரூ.3,79,510த்தை அடையாளம் தெரியாத நபர்கள் ஆன்லைன் மூலமாக கடந்த மாதம் எடுத்தனர், இதுகுறித்து, வங்கியில் சென்று கேட்டதற்கு, ஆன்லைன் மூலம் தங்களது சேமிப்பு பணம் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளதை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து பணத்தை இழந்த லக்ஷ்மி திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., அரவிந்தனிடம் புகார் கொடுத்தார். இந்த புகார் மனுமீது உடனடியாக திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிந்து, விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க மணவாளநகர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், டவுன் எஸ்.ஐ., சக்திவேல் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.